Donnerstag, 25. April 2013

உன் நினைவு

உன் நினைவு

ஊற்றாக உள்ளே
உன்நினைவு பெருகுது
காற்றாக விரிந்தே
கவிதையாக மலருது

மாற்றம் கேட்டு
மனமும் தவிக்குது
நேற்றும் இன்றும்
நெஞ்சம் துடிக்குது

உரிமை உணர்வோடு
உயிரும் பேசுது
எரியும் நெருப்புக்குள்
எண்ணங்கள் வாழுது

வெற்றியின் வேர்தேடி
வேதனைகள் நீளுதே
பற்றிய கொடிபோல்
பாசமிங்கு படருதே

கம்பனுக்கு மகளாகி
கண்ணுக்குள் தேடியே
நம்பவேண்டுமென்றே
நாளெல்லாம் பாடுகின்றேன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen