Donnerstag, 25. April 2013

வெள்ளைக்காரிகள்!!!


வெள்ளை நிலாக்கள்
வீதி ஊர்வலம்
வருகிறார்கள்

கள்ளத்தனம்
கண்ணிலில்லை
காமத்தாக்கம்
ஏதுமில்லை

கொள்ளை போக
ஓன்றுமில்லை
கொடியில் பூக்கும்
முல்லை பூக்கள்

பாதி உடையோ
சரிந்து விழ
மீதி நடையில்
தெரிந்து வர

அந்தரங்கங்கள்
ஆடி வர
இந்திர பெண்போல்
இவர்கள் திரிகிறார்கள்

மேலாடை கட்டிய
மின்னல் தாரகைகள்
நூலாடைக்குள்
நுழைந்து வாழாமல்

பாலாடை நீக்கி
பார்த்தால் என்ன
பார்வைகளில்
பேதமில்லை

எண்ணங்களில்
கறைகளின்றி
எல்லோரிடமும்
பேசுகிறார்கள்

தொட்ட போதும்
கை விட்ட போதும்
காதலில்லை…

காதலென்ற
சொல்லுக்குள்
வாழ்க்கையுமில்லை..

இந்த நாளை
சுவைத்து
இன்பமுடன்
வாழ்கிறார்கள்…

நொடிக்கொருமுறை
பூக்காவிட்டாலும்
அடிக்கடி
இறந்து மலர்கிறதே
இந்தக்காதல்
எப்படி..!!!



Keine Kommentare:

Kommentar veröffentlichen