தோளோடு சாய்ந்திட வா ...
அழகான பாடலே
அடி நெஞ்சை ஆளுதே
பழகிய நினைவுகள்
பறந்தெங்கோ போகுதே
இதமான நாளிலே
இதயமும் மகிழுதே
பருவத்தின் மாற்றங்கள்
பனிப்பூவாய் விழுகுதே
கண்ணுக்குள் காட்சிகள்
கலந்தென்னை மீட்டுதே
பெண்ணுக்குள் சாட்சிகள்
பேசாமல்பேசி வாட்டுதே
வெண்நிற மேகத்துக்குள்
விளையாடும் நிலவே நில்
மண்ணினில் மலரொன்று
மடிவதும் சரிதானா சொல்
பாலோடு பழம்கொண்டு
பரிமாற விருந்துண்டு
தோளோடு சாய்ந்திட
துணையாக வா இன்று
நாளோன்று நீங்கினால்
நாம் தேடி பார்ப்போமா
நூலாக தேய்கின்றேன்
நீ அதை அறிவாயா...
அடி நெஞ்சை ஆளுதே
பழகிய நினைவுகள்
பறந்தெங்கோ போகுதே
இதமான நாளிலே
இதயமும் மகிழுதே
பருவத்தின் மாற்றங்கள்
பனிப்பூவாய் விழுகுதே
கண்ணுக்குள் காட்சிகள்
கலந்தென்னை மீட்டுதே
பெண்ணுக்குள் சாட்சிகள்
பேசாமல்பேசி வாட்டுதே
வெண்நிற மேகத்துக்குள்
விளையாடும் நிலவே நில்
மண்ணினில் மலரொன்று
மடிவதும் சரிதானா சொல்
பாலோடு பழம்கொண்டு
பரிமாற விருந்துண்டு
தோளோடு சாய்ந்திட
துணையாக வா இன்று
நாளோன்று நீங்கினால்
நாம் தேடி பார்ப்போமா
நூலாக தேய்கின்றேன்
நீ அதை அறிவாயா...
Keine Kommentare:
Kommentar veröffentlichen