கற்பனையில்..
உன்னை நினைத்திங்கு
உறக்கத்தில் தவிக்கின்றேன்
கண்ணைத்திறக்காமல்
கனவுலகில் மிதக்கின்றேன்
வண்ணக் கோலங்களில்
வாழ்வை ரசிக்கின்றேன்
எண்ணமெல்லாம் கோர்த்து
எழுத்தாக வடிக்கின்றேன்
எல்லைகள் தாண்டாமல்
இதையத்தை காக்கின்றேன்
சொல்ல மொழியில்லா
சுகத்தில் மிதக்கின்றேன்
ஆழ்கடல் மூழ்காமலே
அமுதத்தைப் பருகுகின்றேன்
பால்நிலவு போல் தினம்
பரந்தே விரிகின்றேன்
உன்னை நினைத்திங்கு
உறக்கத்தில் தவிக்கின்றேன்
கண்ணைத்திறக்காமல்
கனவுலகில் மிதக்கின்றேன்
வண்ணக் கோலங்களில்
வாழ்வை ரசிக்கின்றேன்
எண்ணமெல்லாம் கோர்த்து
எழுத்தாக வடிக்கின்றேன்
எல்லைகள் தாண்டாமல்
இதையத்தை காக்கின்றேன்
சொல்ல மொழியில்லா
சுகத்தில் மிதக்கின்றேன்
ஆழ்கடல் மூழ்காமலே
அமுதத்தைப் பருகுகின்றேன்
பால்நிலவு போல் தினம்
பரந்தே விரிகின்றேன்