Dienstag, 14. Mai 2013

தப்பித்துக்கொள்!!!

தப்பித்துக்கொள்!!!

நல்ல உள்ளத்தை
நாளும் போற்று
எல்லோரும் வாழ
இனிது பணியாற்று

மாயவலைகளில்
மயங்கிவீழாதே
ஆய கலைகளை
அறிந்து முன்னேறு

தீய நினைவுகளை
தீயிட்டுக் கொழுத்து
தூய நினைவுகளால்
துணிவினை ஏற்று

வேதங்கள் போற்று
வேந்தனை வேண்டு
நாதங்கள் மீட்டியே
நாளும் பண்பாடு

Sonntag, 12. Mai 2013

உயிரோடு உயிர்கோர்ப்போம்

 

ஏதும் அறியாமல்
எண்ணம் பிறக்குது
போதும் போதுமுன்
பேசும் நினைவுகள்

பொங்கும் ஆசைகள்
கோலம் போட
போகும் பாதையோ
நீளமாக
அங்கும் இங்கும்
அன்பு வெள்ளமாக
சிந்தும் நதி
சந்தம் சொல்லிப்பாடுதே

வள்ளுவனின்
வார்த்தைக்குள்ளே
வாழ்ந்து
வாழும் காலமெல்லாம்
இருப்போம் சேர்ந்து
உள்ளம் எங்கும்
இன்பம் பொங்க
உயிரோடு
உயிர்கோர்ப்போம்
உணர்வோடு
ஒன்றாகுவோம்
நாமே..