உயிரோடு உயிர்கோர்ப்போம்
ஏதும் அறியாமல்
எண்ணம் பிறக்குது
போதும் போதுமுன்
பேசும் நினைவுகள்
பொங்கும் ஆசைகள்
கோலம் போட
போகும் பாதையோ
நீளமாக
அங்கும் இங்கும்
அன்பு வெள்ளமாக
சிந்தும் நதி
சந்தம் சொல்லிப்பாடுதே
வள்ளுவனின்
வார்த்தைக்குள்ளே
வாழ்ந்து
வாழும் காலமெல்லாம்
இருப்போம் சேர்ந்து
உள்ளம் எங்கும்
இன்பம் பொங்க
உயிரோடு
உயிர்கோர்ப்போம்
உணர்வோடு
ஒன்றாகுவோம்
நாமே..
Keine Kommentare:
Kommentar veröffentlichen