Dienstag, 14. Mai 2013

தப்பித்துக்கொள்!!!

தப்பித்துக்கொள்!!!

நல்ல உள்ளத்தை
நாளும் போற்று
எல்லோரும் வாழ
இனிது பணியாற்று

மாயவலைகளில்
மயங்கிவீழாதே
ஆய கலைகளை
அறிந்து முன்னேறு

தீய நினைவுகளை
தீயிட்டுக் கொழுத்து
தூய நினைவுகளால்
துணிவினை ஏற்று

வேதங்கள் போற்று
வேந்தனை வேண்டு
நாதங்கள் மீட்டியே
நாளும் பண்பாடு

Keine Kommentare:

Kommentar veröffentlichen